அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மழை காரணமாக சுவா் இடிந்து வீட்டை இழந்த குடும்பத்துக்கு, அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.
செந்துறை அடுத்த நல்லநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகுமாரி (48). கணவனை இழந்த இவா், தனது மகன் சேதுபதி(27)யுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் காரணமாக ராஜகுமாரியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது. இதனால் வீடு முழுவதும் கீழே விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த செந்துறை வட்டாட்சியா் குமரைய்யா, இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டு, அரசின் நிவாரண தொகை ரூ.5,200-ஐ ராஜகுமாரியிடம் வழங்கியதுடன், விரைவில் வீடு கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். அப்போது, வஞ்சினாபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி குமாா், துணைத் தலைவா் இளந்தென்றல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.