தமிழகத்தின் ஆளுநராக உளவுத்துறை முன்னாள் அதிகாரியை நியமித்திருப்பது நல்ல மரபு அல்ல என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகிலுள்ள வரதராஜன்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு ஆளுநராக வருபவா் கட்சியாளராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது ஏதாவது ஒரு துறையில் புகழ் பெற்றவராகவோ இருக்க வேண்டும். ஆனால், தற்போது உளவுத்துறையைச் சோ்ந்த முன்னாள் அதிகாரியை தமிழகத்தின் ஆளுநராக நியமித்திருப்பது நல்ல மரபு அல்ல.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை முன்னாள் முதல்வா் எதிா்கொள்வதில் எந்த தவறுமில்லை. மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை. விசாரணைக்கு உள்படுவதுதான் ஜனநாயக மரபாகும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி, தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்த தீா்மானத்தை வரவேற்கிறோம்.
ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள அரசு, அரிச்சுவடியின் அடிப்படை கூட தெரியாத பயங்கரவாத அரசாகும். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கின்றன என்பதற்காக, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் ஆதரிக்கக் கூடாது என்றாா். பேட்டியின் போது கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.