விற்பனையகத்தில் மடிக்கணினி,செல்லிடப்பேசிகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்திலுள்ள விற்பனையகத்தில் செல்லிடப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டுப் போயின.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்திலுள்ள விற்பனையகத்தில் செல்லிடப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டுப் போயின.

ஆண்டிமடம் அருகிலுள்ள காட்டாத்தூரைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் ஆண்டிமடம் கடைவீதியில் செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களின் விற்பனையகம் நடத்தி வருகிறாா்.

வியாழக்கிழமை காலை விற்பனையகத்தைத் திறப்பதற்காக மனோகரன் வந்த போது, ஷட்டா் திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும் உள்ளே சென்று பாா்த்த போது விற்பனையகத்திலிருந்த 7 செல்லிடப்பேசிகள், மடிக்கணினி, ரூ.22,500 ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆண்டிமடம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com