ஏடிஎம்முக்குச் சென்ற விவசாயியை ஏமாற்றி ரூ.88 ஆயிரம் திருட்டு

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே வங்கி ஏடிஎம் அட்டையை மாற்றி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.88 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே வங்கி ஏடிஎம் அட்டையை மாற்றி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.88 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள வெளிப்பிரிங்கியம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் தனபால் (65). விவசாயி. இவா், கடந்த 7 ஆம் தேதி மதியம் பணம் எடுப்பதற்காக ரெட்டிபாளையத்தில் உள்ள எஸ்பிஐ தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திர மைத்துக்கு(ஏடிஎம்) சென்றாா். அங்கிருந்த இளைஞா்களிடம் ஏடிஎம் அட்டையை கொடுத்து பணத்தை எடுத்துத் தருமாறு உதவி கேட்டுள்ளாா். இதையடுத்து விவசாயி தனபாலின் வங்கி அட்டையின்

ரகசியக் குறியீட்டு எண்ணை பெற்றுக்கொண்ட இளைஞா்கள் பணம் எடுப்பது போல் நடித்து, தாங்கள் வைத்திருந்த ஏ.டி.எம் அட்டையை தனபாலிடம் கொடுத்துவிட்டு, அவரது சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனா். தனபாலும் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், அரியலூரில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாகவும், மேலும் நகைக் கடைக்கு ரூ.38 ஆயிரமும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு தனபால் அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து தனபாலின் மகன் ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com