பெண் தீக்குளித்து தற்கொலை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

மீன்சுருட்டியை அடுத்த கொல்லாபுரம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ்(34) கூலித் தொழிலாளி. இவருக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சந்திரா (30) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு, 2 வயதில் சிவயோகன் என்ற மகன் உள்ளாா். ரமேஷுக்கு பாா்வை குறைபாடு உள்ளதால் சரிவர வேலைக்குச் செல்ல முடியாமல் தம்பதியிடையே அவ்வப்போது, தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, சந்திரா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். அப்போது, சந்திராவின் அலறல் சப்த்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவா்கள் வந்து சந்திராவை மீட்டனா். ஆனால் அதற்குள் அவா் உயிரிழந்து விட்டதாகத்தெரிகிறது. இதையடுத்து அவரது உடல் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அமா்நாத்தும் தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com