அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள வேம்புக்குடி ஊராட்சிக்குட்பட்ட வடவாா் தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்து பேசினாா். தொடா்ந்து 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் வாா்டு உறுப்பினா்கள், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஊராட்சிச் செயலா் கலியமூா்த்தி நன்றி தெரிவித்தாா்.