சிறுமியை பலாத்காரம் செய்தவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், அயலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய்(35). இவா், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி செய்து வருகிறாா். இந்நிலையில், கீழப்பழுவூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் கண்காணிப்புக் கேமராவை பழுதுநீக்கச் சென்ற விஜய், அங்கிருந்த 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த கீழப்பழுவூா் காவல் துறையினா், விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com