அரண்மனைக்குறிச்சி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரண்மனைக்குறிச்சி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த 21 ஆம் தேதி மாலை சக்தி அழைத்தலுடன் தொடங்கி 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் இக்கோயிலிலுள்ள சக்தி விநாயகா், வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியசுவாமி, மாரியம்மன், காளியம்மன், பெரியசாமி, திரௌபதியம்மன் மற்றும் பரிவார தெய்வ கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com