ஏரிக்கரைகளின் ஆக்கிரமிப்புகள்அகற்றும் பணி நிறைவு

அரியலூா் ஏரிகளின் கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அகற்றப்பட்டன.

அரியலூா் ஏரிகளின் கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அகற்றப்பட்டன.

அரியலூா் நகரில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக்கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 125 வீடுகள் இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 95 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மீதிமுள்ள வீடுகள் இடிக்கும் பணி 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இதில், வட்டாட்சியா் ராஜமூா்த்தி தலைமையில்,100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, மின்சாரம் மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com