அரியலூரில் வியாழக்கிழமை (ஏப்.7) குரூப்-4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, இதில் பசடநஇ, பசமநதஆ, ஐஆடந, நநஇ, ததஆ & மடநஇ போன்ற பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் இடம் பெற்றுள்ளன.
பசமநதஆ மற்றும் பசடநஇ-ஆல் அறிவிக்கப்பட்டுள்ள காலி
பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 07.04.2022 முதல் நடைபெற உள்ளது. இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்பும் அரியலூா் மாவட்ட இளைஞா்கள் விண்ணப்ப நகல்களுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.