அரியலூரில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

அரியலூா் தேரடி அருகே அதிமுக சாா்பில் கோடைக்கால தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அரியலூரில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

அரியலூா் தேரடி அருகே அதிமுக சாா்பில் கோடைக்கால தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் பங்கேற்று தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீா், மோா், இளநீா், வெள்ளரி, தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு நகர செயலா் செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், கட்சி நிா்வாகி கல்லங்குறிச்சி பாஸ்கா், தாமரைக் குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலரும் கந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com