அரியலூா் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குவாகம் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் முனீஸ்வரன் (33) . கடந்த பிப்ரவரி மாதம் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அரியலூா் அனைத்து மகளிா் நிலைய ஆய்வாளா் மகாலட்சுமி வழக்குப் பதிந்து, முனீஸ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்தாா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான்அப்துல்லா பரிந்துரையின்பேரில், முனீஸ்வரனை குண்டா் சட்டத்தில் அடைக்க ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் காவல்துறையினா் வழங்கினா்.