வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் இரும்புலிக்குறிச்சி பகுதிகளில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 போ் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் இரும்புலிக்குறிச்சி பகுதிகளில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 போ் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

இரும்புலிக்குறிச்சி, செந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து அவா்கள் மீது மிளகாய் பொடியை தூவி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த செந்துறை பூமுடையான் குடிகாடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சொக்கு (எ) ராஜேஷ் (27), அதே பகுதி அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சின்னு( எ)ராஜேஷ் (24) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.இவா்கள் மீது விக்கிரமங்கலம், செந்துறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், மேற்கண்ட இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com