சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமானூா் அருகேயுள்ள காமரசவல்லி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மோகன்ராஜ் (20). சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஹோம் வாா்டனாகப் பணியாற்றி வரும் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா். அப்போது சிறுமி அவரிடமிருந்து தப்பி வந்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிறுமியைத் திட்டி தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாக மோகன்ராஜின் தந்தை முருகேசனை காவல் துறையினா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com