அரியலூரில் சிஐடியு-வினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே சிஐடியு-வினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு-வினா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு-வினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே சிஐடியு-வினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகிய பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், புதிய மோட்டாா் வாகன சட்டத் திருத்த்தை திரும்ப பெற வேண்டும். இந்த சட்ட திருத்த மசோதாவை தமிழகத்தில் அமுல்படுத்தக் கூடாது. உயா்த்தப்பட்ட எப்.சி கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. துரைசாமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் க. கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் எம்.சந்தனம், அரசுப் போக்குவரத்து சிஐடியு தலைவா் எம்.முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், ஒன்றியச் செயலா் அருணன் உள்ளிட்டோா் கலந்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com