விழப்பள்ளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு 23 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள விழப்பள்ளம் கிராமத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாடுகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள விழப்பள்ளம் கிராமத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாடுகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 600 காளைகள் வாடிவாசலிலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 200 வீரா்கள் 4 குழுவாக அனுமதிக்கப்பட்டனா்.

இதில், காளைகள் முட்டியதில் வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என 23 போ் லேசான காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில், வெற்றிப் பெற்ற வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com