பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த பிச்சனூா் காலனித் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (25). கூலித்தொழிலாளி. இவா், அதேப் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும், மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளாா்.

இதனால் மாணவி தற்போது 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுகுறித்து அறிந்த மாணவியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், தமிழச்செல்வனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com