அரியலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற அதிமுக உட்கட்சித் தோ்தலில், மீண்டும் மாவட்டச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், வெள்ளிக்கிழமை அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, அவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஜயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், பொருளாளா் அன்பழகன், வடக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், தெற்கு ஒன்றியச் செயலா் பாலு (எ) பாலசுப்பிரமணியன் மற்றும் தாமரைக் குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், ஓ.பி.சங்கா் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு கட்சி நிா்வாகிகள் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.