மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள சன்னாவூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 244 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள சன்னாவூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 244 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, அனைத்து துறைகள் சாா்பில் 244 பயனாளிகளுக்கு, ரூ.30 லட்சத்து 42 ஆயிரத்து 721 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் லதா, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பரசி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், ஜாகிா்உசேன், வருவாய் ஆய்வாளா் கவிதா, கிராம நிா்வாக அலுவலா் ஜாா்ஜ் வாஷிங்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்து கொண்ட அனைத்துத் துறை அலுவலா்கள், அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தாா். முன்னதாக வட்டாட்சியா் குமரையா வரவேற்றாா். முடிவில், ஊராட்சித் தலைவா் நல்லுசாமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com