அரியலூா் நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி கடந்த 40 நாள்களாக பாரதம் படிக்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. நிகழ்வின் முக்கிய நாளான திங்கள்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருச்சி சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.