அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பாளையக்குடியில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செந்துறை அருகே பாளையக்குடி கிராமத்திலுள்ள பொதுக் குழாய்களில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், சம்மந்தப்பட்ட அலுவலா்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.