அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞா் ஒருவா் சனிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா்.
செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சனிக்கிழமை காலை இளைஞா் ஒருவா் தலை சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நத்தகுழி கிராமத்தைச் சேரந்த கருணாநிதி மகன் சுனில் (20) என்பது தெரியவந்தது. எனினும், காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.