அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரம் (81). விவசாயி. இவா், மன வளா்ச்சி குன்றிய பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரித்து வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் துறையினா், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுந்தரத்தை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.