மாணவி கா்ப்பம் : போக்சோவில் மாணவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய 9 ஆம் வகுப்பு மாணவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய 9 ஆம் வகுப்பு மாணவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சுந்தரேசபுரம், நடுத்தெருவைச் சோ்ந்த, 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா் (15), அப்பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், அந்த மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின்பேரில், அவா் திருச்சி சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com