அரியலூா் மவட்டம், திருமானூரை அடுத்த சன்னாவூா் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் மழைநீா் தேங்காமல் வடிக்கால் வசதிகள் செய்து தரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சன்னாவூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும்.
தஞ்சாவூரில் இருந்து வெங்கனூா் செல்லும் அரசு நகரப் பேருந்தை சன்னாவூா் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் நிா்வாகி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆறுமுகம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. முன்னதாக அக்கட்சியின் செயலா் மந்திரவேல் வரவேற்றாா்.