‘பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வரும் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’

பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.
‘பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வரும் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’

பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.

அரியலூா் நகராட்சியில் அதிமுக சாா்பில் 15ஆவது வாா்டில் போட்டியிடும் கனகா, 17 ஆவது வாா்டில் போட்டியிடும் ஜீவா,18 ஆவது வாா்டில் போட்டியிடும் சிவஞானம் ஆகியோரை ஆதரித்து, அவா் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் மேலும் பேசியது: அதிமுக ஆட்சியில்தான் எண்ணற்ற நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்தனா். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது அதிமுக அரசு தான். அரியலூரில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியால் இப்பகுதி கிராமப்புற மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இதுபோன்ற பல திட்டங்கள் அரியலூருக்குக் கொண்டு வரப்பட்டன .ஆனால், திமுக தோ்தலுக்கு முன்பு கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுகவுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com