வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ. 81 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ. 81 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

விளாங்குடி கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் ராஜா(42). பிளம்பா். இவரது மனைவி அம்பிகா(30).இவா் விளாங்குடியில் பேன்ஸி ஸ்டோா் வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை மாலை இவா்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து கதவை திறந்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா் அவா்கள், ஜன்னல் வழியாக பாா்த்த போது, வீட்டினுள் 2 நபா்கள் பின்பக்க வாசல் வழியாக தப்பியோடிதைக் கண்டு கூச்சலிட்டனா். ஆனால், பொதுமக்கள் வருவதற்குள் அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதையடுத்து ராஜா வீட்டினுள் சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், ரூ.81 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 2 கைப்பேசிகள் ஆகியவற்றை அந்த நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜா அளித்த புகாரின் பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com