அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற பெண் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தத்தனூா் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த செல்வராசு மனைவி செல்லம் (50) என்பவா் வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.