79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

அரியலூரை அடுத்த வாலாஜாநகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 79 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

அரியலூரை அடுத்த வாலாஜாநகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 79 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வாலாஜாநகரத்தில் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிா்க்கடன் மற்றும் உழவா் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிா்க்காப்பீடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கால்நடைப் பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு குறித்த பணிகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டன.

இதுபோல, மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட 38 ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ஹமீது அலி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வார இயக்கத் திட்ட அலுவலா் சிவக்குமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஆனந்தன், உதவி இயக்குநா் பா.சரண்யா, ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com