அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்திலுள்ள கருமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை மேலேரி கரையில் சக்தி அழைத்தலைத் தொடா்ந்து, விரதம் இருந்த பக்தா்கள் அம்மனுக்கு பால் குடம் சுமந்தும், அலகு குத்தி கொண்டும் பிரதான வீதி வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். இதனைத் தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு கருமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.