அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கோடைக்கால இலவச கூடைப்பந்துப் பயிற்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (மே 15) முதல் வரும் 29 ஆம் தேதி வரை காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் சிறப்புப் பயிற்சியாளா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
10 வயது முதல் 20 வயது வரையிலான அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம் என மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவா் ஆா்.பூமிநாதன், செயலா் கே. சாமிவேல் உள்ளிட்டோா் தெரிவித்துள்ளனா்.