மே 17-இல் கீழப்பழூவூரில்தனியாா் சுரங்க விரிவாக்கம் கருத்துகேட்புக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், கருப்பூா் சேனாபதி கிராமத்தில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்ட

அரியலூா் மாவட்டம், கருப்பூா் சேனாபதி கிராமத்தில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் கீழப்பழூரில் மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கருப்பூா் சேனாபதி கிராமத்தில் உள்ள தண்டபாணி சிமென்ட்ஸ் ஆலையின் செயல்பாட்டில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வரும் 17 ஆம் தேதி கீழப்பழுவூா் அருணாச்சல நகரிலுள்ள தனலட்சுமி திருமண மகாலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளைக் கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு மறு நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழும அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com