அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஏா் உழவா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் சுபா. இளவரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாக்யராஜ், மாநில துணைத் தலைவா் தங்கத்தமிழன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மருத்துவக் கல்வியை தமிழில் அளிக்கத் திட்டமிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிப்பது, மாணவா்களின் விருப்பத்துக்கேற்ப மொழிகளைக் கற்பதை அனுமதிக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழைக் கட்டாயமாக வேண்டும். தமிழகத்தின் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.