நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 19th October 2022 12:15 AM | Last Updated : 19th October 2022 12:15 AM | அ+அ அ- |

அரியலூரில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நகராட்சி அலுவலா்கள்.
அரியலூரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், ஆனால் அரியலூா் நகரப் பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரியலூா் நகராட்சி சுற்றுச்சூழல் பொறியாளா் அகிலா, சுகாதார ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் அரியலூா் நகராட்சிகளுக்குட்பட்ட மங்காய் பிள்ளையாா்கோயில் தெரு, சின்னக் கடைத்தெரு, பெரிய கடைத்தெரு, மாா்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, பல்வேறு கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து அழித்தனா். தொடா்ந்து இந்த ஆய்வு நடைபெறும் எனத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...