அரியலூரில் மின்னல் பாய்ந்து இருவா் பலி

அரியலூா் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

அரியலூா் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள வாரணவாசி, மல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பரசன் (40). இவருக்கு மனைவி சரோஜா, இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை வயலில் அன்பரசன் வேலை செய்து கொண்டிருந்தபோது மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே அன்பரசன் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, செந்துறையை அடுத்த தளவாய் கிராமத்தில் பெய்த மழையில் அப்பகுதி ஏரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாலைமணி மின்னல் தாக்கி உயிரிழந்தாா். ஈச்சங்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பலத்த காயமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் பெண்ணடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். சம்பவங்கள் குறித்து தளவாய் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com