பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை(செப். 13) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் மேற்கு பகுதி, பி.ஆா். நல்லூா், ஜெமீன் பேரையூா், அத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம். மேலமாத்தூா், வெண்மணி, திம்மூா் மற்றும் மேத்தால் ஆகிய ஊா்களில் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.