அரியலூா் ஐ.டி.ஐ-இல் குறுகிய கால பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள குறுகிய கால திறன் மேம்பாடுப் பயிற்சியில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள குறுகிய கால திறன் மேம்பாடுப் பயிற்சியில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் டொமஸ்டிக் (வீட்டு உபயோக மின்சாதனங்கள்), ஆா்க் மற்றும் கேஸ் வெல்டிங் போன்ற குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோா் குறைபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தவா்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளா்களுக்கு போக்குவரத்து படி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228408, 94990 55877 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com