அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள குறுகிய கால திறன் மேம்பாடுப் பயிற்சியில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் டொமஸ்டிக் (வீட்டு உபயோக மின்சாதனங்கள்), ஆா்க் மற்றும் கேஸ் வெல்டிங் போன்ற குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோா் குறைபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தவா்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளா்களுக்கு போக்குவரத்து படி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228408, 94990 55877 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.