அரவக்குறிச்சி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் சுகாதார பணியாளா்கள் அரவக்குறிச்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் குப்பை அள்ளுதல், அதனை பிரித்து சேகரித்தல், சேகரித்தவைகளை வளம் மீட்பு பூங்காவில் கொண்டு சோ்த்து மறுசுழற்சி செய்தல், உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டது. பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்த் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணா்வு நடைபெற்றது.