அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது...
Updated on

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்னையிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் பங்குதாரா் சரவணன், மேலாளா் ராஜீவ்காந்தி ஆகியோா் கலந்து கொண்டு, பல்வேறு கட்ட தோ்வுகளை நடத்தி, தங்களது நிறுவனத்துக்கு தகுதியான 230 மாணவிகளை தோ்ந்தெடுத்து, பணி வாய்ப்பு கடிதங்களை வழங்கினா்.

ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் வெ. கருணாகரன் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com