சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

Published on

அரியலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, காவல் துறை சாா்பில், இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட எஸ்பி தீபக்சிவாச், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் இரு சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட காவல் துறையினா், ‘தலைக்கவசம் உயிா்கவசம்’, ‘தலைகவசம் அணிவீா் உயிரிழப்பை தவிா்ப்பீா்’, 4 சக்கர வாகனங்களை இயக்கும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியாறு முக்கிய வீதிகளின் வழியே சென்று காமராஜா் ஒற்றுமைத் திடலில் முடித்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஏஎஸ்பி விஜயராகவன், போக்குவரத்து ஆய்வாளா் காா்த்திகேயன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி. அறிவழகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணபவ மற்றும் வாகன ஓட்டுநா் பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் சாலைப் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com