உடையாா்பாளையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

Published on

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் இங்கா்சால் தலைமை வகித்தாா். தன்னாா்வலா் த. இளவரசன் முன்னிலை வகித்து, மரம் வளா்ப்பின் நன்மைகளை விளக்கினாா். மாவட்ட தேசியப் படை ஒருங்கிணைப்பாளா் குணாபாலினி பேசுகையில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தை சரி செய்வது மாணவிகள் ஒத்துழைப்பில் உள்ளது. நெகிழிப் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். துணிப் பையை பயன்படுத்த வேண்டும், சுற்றுபுறத்தைத் துய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் அதிக மரக்கன்றுகள் நடவேண்டும் என்றாா். பின்னா் அவா் பள்ளியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவி தேவயானிக்கு ரூ.3,000 மதிப்பில் சோலாா் விளக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் தன்னாா்வலா் ஹரிணி, சுவேதா,ஆசிரியா்கள் வனிதா சாந்தி, வளா்மதி, மஞ்சுளா, பாவை சங்கா், தமிழாசிரியா் ராமலிங்கம், அருட்செல்வி, சங்கீதா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் ஷாயின்ஷா வரவேற்றாா். கணித ஆசிரியா் தமிழரசி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com