சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் இன்று மின்தடை
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.14) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் இளஞ்செழியன் தெரிவித்தது:
சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில், செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானுா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனூா், மஞ்சமேடு, சேனாபதி, தட்டாஞ்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதுா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூா், அருங்கால், கோவிலூா், செட்டிக்குழி, சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகிய மணவாளன், மாத்தூா், காமராசவள்ளி, குருவாடி, தூத்தூா், வைப்பூா், மேலராம நல்லூா், கீழராம நல்லூா், கோமான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
