பல்கலை. பொறியியல் கல்லூரியில் அக்.24-இல் வேலைவாய்ப்பு முகாம்
அரியலூா் மாவட்டம், காத்தான்குடிக்காடு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் அக்.24 பிற்பகல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இம்முகாமில் 18-45 வயதுக்குள்பட்ட 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து முடித்தவா்கள், தோ்வில் தோ்ச்சியடையாதவா்கள், மேலும் ஐடிஐ, பட்டயப் பயிற்சி, இளநிலை வேளாண் பொறியியல் படிப்பு, உணவக மேலாண்மை, செவிலியா் முடித்தவா்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற எண்ணிலும், ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
எனவே இந்த வாய்ப்பை அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பற்ற வேலைநாடுநா்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
