ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படத்தை அச்சிடக் கோரி, தலித் விடுதலை இயக்கம் சார்பில் பிரதமர், குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தலித் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் கராத்தே ரவி, இளைஞரணிச் செயலர் நிசோக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை தேசிய அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடக்கிவைத்தார். பொதுச் செயலர் தலித் ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அம்பேத்கர் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வலியுறுத்திப் பேசினார்.
கோரிக்கையை வலியுறுத்தி, குடியரசு தலைவர், பிரதமர், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், தலித் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.