திருமணத்துக்கு ஏற்பாடு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Published on
Updated on
1 min read

திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே உள்ள கவரப்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகள் அமுதவேணி(20). இவர், தற்போது பி.ஏ தமிழ் படித்தவர். மேற்கொண்டு எம்.ஏ படிக்கப்போவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அமுதவேணி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com