வாய்க்காலில் சடலம்: போலீஸார் விசாரணை

மாயனூர் அருகே வாய்க்காலில் கூலித்தொழிலாளி சிதிலமடைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

மாயனூர் அருகே வாய்க்காலில் கூலித்தொழிலாளி சிதிலமடைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மேட்டுத்திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (45). கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் மாயமானார். இந்நிலையில் புதன்கிழமை இவரது உடல் அழுகிய நிலையில் கட்டளை மேட்டுவாய்க்கால் கரையில் கிடந்தது.
இதனைக்கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலையடுத்து மாயனூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com