க. பரமத்தி ஒன்றியத் தலைமையிடமாகச் செயல்படும் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
க. பரமத்தி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு பல்வேறு துறைகள் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைக்கிறது.கிடைக்கும் வருவாயில் மக்கள் நலத்திட்டங்கள் செய்ய கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படும் நிலையில், கிராம ஊராட்சியால் குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்ய முடிகிறது. இதைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தினால் அரசு கூடுதலாக நிதி ஒதுக்க முடியும் என்கின்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.