மாயனூர் மணல் குவாரி தாற்காலிக மூடல்

வெளிமாவட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மாயனூர் மணல் குவாரி புதன்கிழமை தாற்காலிகமாக மூடப்பட்டது.
Published on
Updated on
1 min read

வெளிமாவட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மாயனூர் மணல் குவாரி புதன்கிழமை தாற்காலிகமாக மூடப்பட்டது.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் அண்மையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இந்தக் குவாரியில் மணல் லோடு வழங்குவதில் உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், வெளிமாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை எனக்கூறியும் வெளிமாவட்ட லாரி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை அரசு மணல் குவாரி தாற்காலிகமாக செயல்படாது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com