வாங்கல் அருகே லாரியில் மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர்-வாங்கல் சாலையில் எல்லமேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் வாங்கல் போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே மணல் பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு வந்ததது தெரியவந்தது. இதையடுத்து மணல் ஏற்றி வந்த கரூர் என்.புதூர் செவ்வந்திபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(40) என்பவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து லாரியைப் பறிமுதல் செய்தனர்.