காவல் துறையில் பதவி உயர்வுபெற்ற காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை பாராட்டினார்.
தமிழ்நாடு காவல்துறையில் 2003-ம் ஆண்டு காவலராக பணிக்குச் சேர்ந்து முதல்நிலைக் காவலராக பணியாற்றி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் டிச.1 முதல் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். அவர்கள் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரனை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.